நாட்டில் 1 கோடி பேருக்கு இன்று தடுப்பூசி
இந்தியாவில் இன்று (திங்கள்கிழமை) மட்டும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இன்று (திங்கள்கிழமை) மட்டும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 11 நாள்களில் ஒரு நாளில் மட்டும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது இது மூன்றாவது முறை. இதுவரை மொத்தம் 69.68 கோடி (69,68,96,328) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இன்று இரவு 7 மணி வரை 92 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டதன் இறுதி தகவல்கள் பின்னர் கிடைக்கும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதாரப் பணியாளர்கள்:
முதல் தவணை:
இன்று - 538; மொத்தம் -1,03,61,343
இரண்டாவது தவணை:
இன்று - 15,783; மொத்தம் - 84,96,682
முன்களப் பணியாளர்கள்:
முதல் தவணை:
இன்று - 1,186; மொத்தம் -1,83,31,096
இரண்டாவது தவணை:
இன்று - 70,709; மொத்தம் - 1,36,48,605
18-44 வயதினர்:
முதல் தவணை:
இன்று - 45,97,510; மொத்தம் -27,64,10,694
இரண்டாவது தவணை:
இன்று - 14,57,554; மொத்தம் - 3,57,76,726
45-59 வயதினர்:
முதல் தவணை:
இன்று - 12,24,167; மொத்தம் -13,76,62,940
இரண்டாவது தவணை:
இன்று - 8,15,500; மொத்தம் - 5,88,34,379
60 வயதுக்கு மேற்பட்டோர்:
முதல் தவணை:
இன்று - 6,06,772; மொத்தம் -9,01,61,128
இரண்டாவது தவணை:
இன்று - 4,11,103; மொத்தம் - 4,72,12,735
மொத்தம்:
முதல் தவணை:
இன்று - 64,30,173; மொத்தம் - 53,29,27,201
இரண்டாவது தவணை:
இன்று - 27,70,649; மொத்தம் - 16,39,69,127