முகப்பு
இந்தியா

ஒரே நாளில் 1.13 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய சுகாதாரத்துறை

நாட்டில் நேற்று ஒரே நாளில் 1.13 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
ஒரே நாளில் 1.13 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

நாட்டில் நேற்று ஒரே நாளில் 1.13 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

நாடு முழுவதும் ஒரே நாளில் 1,13,53,571 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 11 நாள்களில் மூன்றாவது முறையாக ஒரு கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 69,90,62,776(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 27,76,44,784

இரண்டாம் தவணை - 3,59,16,927

45 - 59 வயது

முதல் தவணை - 13,80,26,694

இரண்டாம் தவணை - 5,89,70,434

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 9,03,51,520

இரண்டாம் தவணை - 4,72,99,828

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,61,392

இரண்டாம் தவணை - 85,01,490

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,31,433

இரண்டாம் தவணை - 1,36,58,274

மொத்தம்69,90,62,776
முழு கட்டுரையைப் படிக்க →