தில்லியில் கரோனா நோய்த் தொற்றுக்கு ஒருவர் பலி
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 50 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,38,041 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 69,932 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.07 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
ஒருவர் மட்டும் நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளார். செப்டம்பர் மாதம் பதிவாகும் முதல் கரோனா பலி இது.
மேலும் 30 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 14,12,572 பேர் குணமடைந்துள்ளனர். 25,083 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 386 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தில்லி தடுப்பூசி நிலவரம்:
கடந்த 24 மணி நேர நிலவரம்:
- முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்: 1,06,558
- இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்: 56,209
- மொத்தம்: 1,62,767
மொத்த தடுப்பூசி நிலவரம்:
- முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்: 1,01,34,046
- இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்: 41,17,055
- மொத்தம்: 1,42,51,101