சட்டப்பேரவையில் தொழுகைக்குத் தனி அறை: பாஜக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் 
இந்தியா

இஸ்லாமியர்கள் தொழுகைக்குத் தனி அறையா?: பாஜக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

DIN


ஜார்கண்ட் சட்டப்பேரவையில் இஸ்லாமிய உறுப்பினர்கள் தொழுகை நடத்துவதற்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. 

இதனைக் கண்டித்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பதற்றத்தை தவிர்க்கும் வகையில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். பாஜக எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் தடியடி நடத்தியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் அவர்களை கலைத்தனர்.

ஜார்கண்ட் சட்டப்பேரவை வளாகத்தில் இஸ்லாமிய உறுப்பினர்கள் தொழுகை வேளையில் நமாஸ் செய்வதற்கு ஏதுவாக தனி அறை ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பேரவை வளாகத்தில் 'ஜெய் ஸ்ரீ அனுமான்', 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களுடன் பாஜக தொண்டர்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை காவல் துறையினர் கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்க காலத்திலேயே பெண்கள் கல்வி கற்ற மண் தமிழகம்! அபூா்வா ஐ.ஏ.எஸ்.

மனைவி, மகனுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

"ஒரே பாரதம், உன்னத பாரதம்' - காசி தமிழ் சங்கத்தின் உணர்வு! பிரதமர் நரேந்திர மோடி

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.53 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

மியான்மரில் தேர்தல் நாடகம்!

SCROLL FOR NEXT