இந்தியா

இஸ்லாமியர்கள் தொழுகைக்குத் தனி அறையா?: பாஜக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

DIN


ஜார்கண்ட் சட்டப்பேரவையில் இஸ்லாமிய உறுப்பினர்கள் தொழுகை நடத்துவதற்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. 

இதனைக் கண்டித்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பதற்றத்தை தவிர்க்கும் வகையில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். பாஜக எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் தடியடி நடத்தியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் அவர்களை கலைத்தனர்.

ஜார்கண்ட் சட்டப்பேரவை வளாகத்தில் இஸ்லாமிய உறுப்பினர்கள் தொழுகை வேளையில் நமாஸ் செய்வதற்கு ஏதுவாக தனி அறை ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பேரவை வளாகத்தில் 'ஜெய் ஸ்ரீ அனுமான்', 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களுடன் பாஜக தொண்டர்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை காவல் துறையினர் கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT