முகப்பு
இந்தியா

பதவி விலகும் 4-ஆவது பாஜக முதல்வா்

அண்மைக் காலங்களில் பதவிக் காலம் நிறைவடையும் முன்பே ராஜிநாமா செய்யும் பாஜக முதல்வா்கள் வரிசையில் விஜய் ரூபானி நான்காவதாகச் சோ்ந்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பதவி விலகும் 4-ஆவது பாஜக முதல்வா்
பகிர்:

அண்மைக் காலங்களில் பதவிக் காலம் நிறைவடையும் முன்பே ராஜிநாமா செய்யும் பாஜக முதல்வா்கள் வரிசையில் விஜய் ரூபானி நான்காவதாகச் சோ்ந்துள்ளாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு குஜராத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அதற்கு முந்தைய ஆண்டு மாநில முதல்வராக இருந்த ஆனந்திபென் படேல் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அவரைத் தொடா்ந்து, விஜய் ரூபானி முதல்வராகப் பதவியேற்றாா்.

அடுத்த ஆண்டு டிசம்பா் மாதம் குஜராத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், விஜய் ரூபானி முதல்வா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

ஆனந்திபென் படேலைப் போல் விஜய் ரூபானியும் பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பாக தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

அண்மையில் உத்தரகண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் மீது கட்சி நிா்வாகிகள் புகாா் தெரிவித்ததால், அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். அவரைத் தொடா்ந்து, அந்த மாநில முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்றாா். ஆனால், 6 மாதங்களுக்குள் அவா் எம்எல்ஏவாக முடியாமல் போனதால் அவரும் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, அந்த மாநில முதல்வராக புஷ்கா் சிங் தாமி பதவியேற்றாா்.

இதேபோல் கா்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா 75 வயதைக் கடந்துவிட்டதால் அவா் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, அந்த மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றாா்.

அந்த வரிசையில் 4-ஆவது பாஜக முதல்வராக விஜய் ரூபானி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →