இந்தியாவில் இதுவரை 82.65 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 75,57,529 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 82,65,15,754 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 33,47,62,522 இரண்டாம் தவணை - 6,47,24,317 |
45 - 59 வயது | முதல் தவணை - 15,29,73,905 இரண்டாம் தவணை - 7,07,83,297 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 9,79,37,287 இரண்டாம் தவணை - 5,32,33,801 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,69,831 இரண்டாம் தவணை - 87,67,189 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,46,681 இரண்டாம் தவணை - 1,46,16,924 |
மொத்தம் | 82,65,15,754 |