மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,276 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரேத்தில் புதிதாக 3,276 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 65,41,119 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் இன்று மேலும் 58 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,38,834ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 37,984 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 3,723 பேர் மீண்டனர்.
இதையும் படிக்க- முதல் மாநிலமாக 10 கோடி தடுப்பூசி செலுத்தியது உ.பி.
இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 63,60,735 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 5,79,92,010 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.