இந்தியா

புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகள்: பிரதமர் மோடி நேரில் ஆய்வு

புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகளை பிரதமர் மோடி நேற்று இரவு திடீரென நேரில் பார்வையிட்டார்.

DIN

புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகளை பிரதமர் மோடி நேற்று இரவு திடீரென நேரில் பார்வையிட்டார்.

தில்லியில் சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.970 கோடி மதிப்பீட்டில் முக்கோண வடிவில் 4 மாடிகளைக் கொண்டதாக புதிய நாடாளுமன்றம் அமையவுள்ளது. இதன் கட்டுமானப் பணிகளை வரும் 2022-ஆம் ஆண்டு நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு முன்பாக கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற கட்டடத்தையொட்டி மத்திய அரசு அலுவலகங்களின் ஒருங்கிணைந்த செயலகம், குடியரசு துணைத் தலைவா் இல்லம் உள்ளிட்டவையும் அமையவுள்ளன. இதற்கு பிரதமா் நரேந்திர மோடி கடந்த டிசம்பா் 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகளை பிரதமர் மோடி நேற்று இரவு திடீரென நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இடமும் கட்டடப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொழிலாளர்களின் நலன்களையும் அப்போது பிரதமர் மோடி விசாரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினியை இவர் இயக்கினால் எப்படி இருக்கும்?

28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் நார்வே..! நிறைவேற்றிய எர்லிங் ஹாலண்ட்!

முதல்வர் ஸ்டாலின், அஜித், அரவிந்த் சாமி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: எஸ். எஸ். ராஜமௌலி

குறுகிய காலத்தில் முடிவடையும் பிரபல தொடர்!

SCROLL FOR NEXT