ஹிந்து இளைஞனை மணந்த இஸ்லாமிய சிறுமி மாயம்: 66 நாள்கள் கழித்து மீட்பு 
இந்தியா

ஹிந்து இளைஞனை மணந்த இஸ்லாமிய சிறுமி மாயம்: 66 நாள்கள் கழித்து மீட்பு

திரிபுராவில் ஹிந்து இளைஞரை மணந்த இஸ்லாமிய சிறுமி மாயமானதாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் 66 நாள்கள் கழித்து சிறுமியை மீட்டனர்.

DIN

திரிபுராவில் ஹிந்து இளைஞரை மணந்த இஸ்லாமிய சிறுமி மாயமானதாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் 66 நாள்கள் கழித்து சிறுமியை மீட்டனர்.  

திரிபுரா மாநிலத்தில் தர்மாநகர் பகுதியைச் சேர்ந்த சுமன் சங்கர் என்ற 23 வயதுடைய இளைஞர் பிஷால்கர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்ததாக கூறப்படுகிறது. 

பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சிறுமியை, இளைஞர் சுமன் ஹிந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டு சிறுமியை மதமாற்றம் செய்துள்ளார். 

ஆனால், திருமணம் நடைபெற்றதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் சிறுமியைக் காணவில்லை என சிறுமியின் தந்தை துலால் மியா என்பவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

எனினும் காவல் துறை அதிக நாட்டம் செலுத்தாததால் சிறுமியின் தந்தை நீதிமன்றத்தை நாடினார். இதனை விசாரித்த நீதிமன்றம், சிறுமியைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறைக்கு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து செபாஹிஜாலா மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான குழு தேடுதல் பணியில் ஈடுபட்டு நேற்று சிறுமியைக் கண்டுபிடித்தது.

இது தொடர்பாக பேசிய காவல் கண்காணிப்பாளர் கிருஷ்னேண்டு சர்க்ரவர்த்தி, சிறுமி காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரில் ஹிந்துத்துவா அமைப்பை சேர்ந்த தலைவர் தபான் திப்நாத் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுமி இரண்டு மாதம் கர்ப்பிணியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் உழவா் திருநாளைப்போல: நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொண்டாடப்படும் அறுவடை திருவிழாக்கள்!

பாலக்கோட்டில் வரலாற்று நூல்கள் வெளியீடு

பொங்கல்: தருமபுரி வாரச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கோவையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

பாளை. சிறையில் கைதி தற்கொலை முயற்சி?

SCROLL FOR NEXT