கேரள சட்டப்பேரவை 
இந்தியா

அக்.4-இல் கூடுகிறது கேரள சட்டப்பேரவை

15ஆவது கேரள சட்டப்பேரவையின் மூன்றாவது கூட்டத்தொடர் அக்டோபர் 4ஆம் தேதி கூட உள்ளதாக பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார்.

DIN

15ஆவது கேரள சட்டப்பேரவையின் மூன்றாவது கூட்டத்தொடர் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற உள்ளதாக பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார்.

கேரள சட்டப்பேரவையின் மூன்றாவது கூட்டத்தொடர் 24 நாள்கள் நடைபெற உள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி தொடங்க உள்ள இந்த கூட்டமானது நவம்பர் 12ஆம் தேதி நிறைவடைகிறது. இதற்கான அறிவிப்பை கேரள சட்டப்பேரவைத் தலைவர் எம்.பி.ராஜன் அறிவித்தார்.

கரோனா காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் மீது விவாதம் ஏதும் நடைபெறாததால் அவை மீதான பேரவையின் ஒப்புதல் இதுவரை பெறப்படவில்லை. இந்நிலையில் நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேறாமல் உள்ள மசோதாக்கள் மீது விவாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னர் அறிவித்த காகிதமில்லா சட்டப்பேரவை திட்டம் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தின் 75 வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு கருத்தரங்குகள், விவாதங்கள் மற்றும் மாநாடுகள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

SCROLL FOR NEXT