மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,132 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,132 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,132 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 5,132 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 64,06,345 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 8,196 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 158 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 64,06,345 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 1,35,413 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி மொத்தம் 58,069 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைவோர் விகிதம் 96.93 சதவிகிதம். இறப்பு விகிதம் 2.11 சதவிகிதம்.