முகப்பு
இந்தியா

தடுப்பூசி செலுத்துவதில் ம.பி. புதிய சாதனை

மத்தியப் பிரதேசத்தில் புதன்கிழமை மட்டும் ஒரேநாளில் 24.20 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
கோப்புப்படம்
பகிர்:


மத்தியப் பிரதேசத்தில் புதன்கிழமை மட்டும் ஒரேநாளில் 24.20 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 

அந்த மாநிலத்தில் இது புதிய சாதனையாக மாநில சுகாதாரத் துறை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 21-ம் தேதி ஒருநாளில் 17.62 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதே சாதனையாக இருந்துள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை 24.20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி தடுப்பூசி செலுத்தும் திட்டத்துக்கான கூடுதல் இயக்குநர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியது:

"புதன்கிழமை மட்டும் மத்தியப் பிரதேசத்தில் 24.20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. தடுப்பூசி செலுத்தும் மாபெரும் திட்டத்தின் முதல் நாள் பதிவு இது. இந்த எண்ணிக்கை வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டன. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது."

முழு கட்டுரையைப் படிக்க →