முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமைக்ரான்: நாட்டின் மொத்த பாதிப்பு 21 ஆக உயர்வு

ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
கோப்புப்படம்
பகிர்:


ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இந்தியாவில் இதுவரை கர்நாடகம், குஜராத், தில்லி, மகாராஷ்டிர ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சமீபத்திய மாநிலமாக தற்போது ராஜஸ்தானும் இணைந்துள்ளது.

இதுவரை 9 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம், நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்கள்:

  • கர்நாடகம் - 2
  • குஜராத் - 1
  • தில்லி - 1
  • மகாராஷ்டிரம் - 8
  • ராஜஸ்தான் - 9 
முழு கட்டுரையைப் படிக்க →