குடியரசுத் தலைவர் உரையின்போது எதிர்ப்பு தெரிவித்த எம்.பி.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையின்போது ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சியை சேர்ந்த எம்.பி. எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையின்போது ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சியை சேர்ந்த எம்.பி. எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினார்.
மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தி குடியரசுத் தலைவரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
நடப்பாண்டிற்கான முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.
குடியரசுத் தலைவர் உரையாற்றும்போது மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்றும், மத்திய அரசு கொண்டுவந்த சட்டங்களை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சியை சேர்ந்த எம்.பி.யான ஹனுமன் பெனிவல் அவையிலிருந்து எழுந்து குடியரசுத் தலைவர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று பதாகையினை உயர்த்திப் பிடித்து முழக்கங்களை எழுப்பினார். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.