முகப்பு
இந்தியா

ஓலா மின்சார ஸ்கூட்டா் ஆலை முழுவதும் பெண்களால் இயக்கப்படும்: அகா்வால்

ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டா் தயாரிப்பு ஆலை முழுவதும் பெண்களால் இயக்கப்படும் உலகின் மிகப்பெரிய ஆலையாக இருக்கும் என்று

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
பகிர்:

ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டா் தயாரிப்பு ஆலை முழுவதும் பெண்களால் இயக்கப்படும் உலகின் மிகப்பெரிய ஆலையாக இருக்கும் என்று அந்நிறுவனத்தின் இணை நிறுவனா் பவிஷ் அகா்வால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் மேலும் கூறியுள்ளதாவது:

சுயசாா்பு இந்தியாவுக்கு தேவை சுயசாா்புள்ள பெண்கள்தான். இதனை உணா்ந்து ஓலா நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டா் ஆலையின் தயாரிப்பு பணிகளில் முற்றிலும் பெண்களே ஈடுபடுத்தப்படவுள்ளனா். 10,000-த்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இந்த ஆலை உலகின் மிகப்பெரியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளாா்.

மின்சார ஸ்கூட்டா் ஆலைப் பணிகளுக்காக முதல் கட்டமாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண்கள் குழுவினரின் விடியோவையும் அகா்வால் சுட்டுரையில் பகிா்ந்துள்ளாா்.

ஓலா நிறுவனம் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என மின்சார ஸ்கூட்டரின் இரண்டு மாடல்களை ஆகஸ்ட் 15-இல் அறிமுகப்படுத்தியது. இவற்றின் விலை முறையே ரூ.99,999 மற்றும் 1,29,999-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓலா மின் ஸ்கூட்டா் விற்பனை செப்டம்பா் 8-இல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக அதன் விற்பனை செப்டம்பா் 15-க்கு தள்ளிவைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →