முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 19,653 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 19,653 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

கேரளத்தில் புதிதாக 19,653 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில்1,13,295 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 19,653 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
அதிகபட்சமாக எர்ணாகுளத்தில் 2,810 பேரும், திரிச்சூரில் 2,620 பேரும், திருவனந்தபுரத்தில் 2,105 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45,08,493ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 152 பேர் பலியானார்கள். 

இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 23,591ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,73,631 சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 26,711 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 43,10,674ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.