புது தில்லி: மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
அரசுமுறைப் பயணமாக புது தில்லி சென்றிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். இதையடுத்து இன்று மாலை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசியுள்ளார்.
இதையும் படிக்க.. இதைச் செய்ய சரியான நேரம் வந்துவிட்டதா?
முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக தில்லி சென்றுள்ளார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது, தமிழக நலன்கள் தொடர்புடைய கோரிக்கைகள் குறித்து வலியுறுத்திப் பேசினார்.
இன்று காலை நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பை நிறைவு செய்து கொண்ட பிறகு, தில்லி அரசுப் பள்ளி மற்றும் தில்லி அரசு மொஹலா கிளினிக்கை நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளைக் கேட்டறிந்தார்.