இந்தியா

நாட்டின் ஒரு பக்கம் கனமழை; மறுபக்கம் வெப்ப அலை: வானிலை ஆய்வு மையம்

ANI


புது தில்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்யும் என்றும், நாட்டின் இதர பகுதிகளில் அனல் கொளுத்தும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களாக அசாம், மேகாலயம், அருணாசலம், நாகாலாந்து, மணிப்பூர், சிக்கிம், மேற்கு வங்கத்தின் ஒரு பகுதிகளில் அடுத்த ஐந்து நாள்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, அசாம், மேகாலயம், அருணாசலப் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்யும்; நாகாலாந்து, மணிப்பூர் பகுதிகளில் ஏப்ரல் 1ஆம் தேதியும், மேற்கு வங்கத்தின் ஒரு சில பகுதிகளிலும், சிக்கிமிலும் ஞாயிறு மற்றும் திங்களன்று கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல, இமாசலம், தெற்கு ஹரியானா, தில்லி, தென்மேற்கு உ.பி., குஜராத், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

ஆந்திர பேரவைத் தேர்தல்: காலையிலேயே வந்து வாக்களித்த ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு

SCROLL FOR NEXT