முகப்பு
இந்தியா

விழாக்கள் போல தேர்வைக் கொண்டாடுங்கள்: மாணவா்களுக்கு மோடி அறிவுரை

பொதுத் தேர்வு குறித்து அச்சமடையாமல், விழாக்கள்  போல தேர்வைக் கொண்டாடுங்கள் என்று மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:51 AM
விழாக்கள் போல தேர்வைக் கொண்டாடுங்கள்: மாணவா்களுக்கு மோடி அறிவுரை
பகிர்:

பொதுத் தேர்வு குறித்து அச்சமடையாமல், விழாக்களை போல தேர்வைக் கொண்டாடுங்கள் என்று மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

பொதுத் தேர்வு குறித்து மக்கள் மன அழுத்தம் அடைய வேண்டாம் என்றும், பெற்றோரும் ஆசிரியர்களும் தங்களது கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்க வேண்டாம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களின் மன அழுத்தம் தீரவும், தன்னம்பிக்கை ஏற்படவும் மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்களுடன் பிரதமா் மோடி இன்று கலந்துரையாடினார். 

பரிக்ஷா பே சர்ச்சா என்ற தலைப்பில் ஐந்தாவது ஆண்டாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

பள்ளி மாணவா்களின் தோ்வு தொடர்பான பல்வேறு விஷயங்களை பரிமாறிக் கொள்ளும்  வகையிலும், அவை தொடா்பாக விவாதிக்கவும் பரிக்ஷா பே சா்ச்சா என்ற தலைப்பில் மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோருடன் பிரதமா் நரேந்திரமோடி ஆண்டுதோறும் கலந்துரையாடி வருகிறார். 

இந்த ஆண்டு, புதுதில்லி, டல்கோத்ரா விளையாட்டு அரங்கில் நூற்றுக்கணக்கான மாணவா்கள், பெற்றோா் மற்றும் ஆசிரியா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் காணொலி வாயிலாகவும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். 

கரோனா பரவல் வெகுவாகக் குறைந்துள்ளதால் தோ்வுகள் அனைத்தும் இணையதளத்தில் இருந்து நேரடியாக எழுதும் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த சூழலில் மாணவா்கள் மன அழுத்தம் இன்றி தோ்வு முறையை பொது இயக்கமாக மாற்றவும் பிரதமரின் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்துகிறது.

பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்வை தொலைக்காட்சிகள், வானொலி, சமூக வலைதளங்கள் வழியாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →