முகப்பு
இந்தியா

2 ஆண்டுகளுக்கு பின் உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணை

உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முழு அளவில் நேரடி விசாரணை இன்று நடைபெறத் தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:52 AM
உச்ச நீதிமன்றம்
பகிர்:


புது தில்லி: உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முழு அளவில் நேரடி விசாரணை இன்று நடைபெறத் தொடங்கியுள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக, 2020ஆம் ஆண்டு முதல் காணொலி காட்சி வாயிலாகவும், வாரத்தில் இரு நாள்கள் நேரடியாகவும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து கரோனாவுக்கு முந்தைய நடைமுறையை பின்பற்றி இன்றுமுதல் முழு அளவில் உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடைபெறத் தொடங்கியுள்ளது.

மேலும், வழக்குரைஞர்கள் கோரிக்கை வைத்தால் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காணொலி வாயிலாக விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →