இந்தியா

அத்தியாவசிய மருந்துகளின் 10% விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: காங்., எம்.பி. வேண்டுகோள்

DIN

புதுதில்லி: சில உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துகளின் மீதான 10% விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. டீன் குரியகோஸ் புதன்கிழமை மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.

தேசிய அத்தியாவசிய மருந்துகளின்(என்எல்இஎம்) கீழ் உள்ள பாராசிட்டமால் மற்றும் அசித்ரோமைசின் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் விலை உயர்ந்ததாக மக்களவையில் அவர் கூறினார்.

இந்த மருந்துகளின் விலைகள் 10.7 சதவீதம் அதிகரித்துள்ளதால்,  மக்களின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறினார்.

இந்த முடிவைத் திரும்பப் பெறவும், உயிர்காக்கும் மருந்துகள் இந்திய மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்க உறுதிசெய்யவும் தான் அரசாங்கத்தை வலியுறுத்துவதாக காங்கிரஸ் எம்.பி. டீன் குரியகோஸ் கூறினார்.

நோய்த்தொற்று, காய்ச்சல், தோல் நோய்கள், இதய நோய்கள், ரத்தசோகை, வைட்டமின்கள், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT