இந்தியா

தொற்றுநோய்க்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்வு: அமைச்சர்

மிசோரம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக மாநில அமைச்சர் தெரிவித்தார். 

DIN

கரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கத் தொடங்கியதால் மிசோரம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக மாநில அமைச்சர் தெரிவித்தார். 

மிசோரத்தில் செவ்வாய்க்கிழமை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் லால்சந்தமா ரால்டே கூறுகையில், 

கல்வி முறையை மேம்படுத்தவும், அதிகளவிலான ஆசிரியர்களை நியமிக்கவும் மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால், பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பத் தூண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார். 

மணிப்பூரின் வடகிழக்கு எல்லையில் உள்ள சகவார்தாய் கிராமத்தில் நடந்த கூட்டத்தில் உரையாற்றி ரால்டே, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட அறிக்கையின்படி, அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான உயர்ந்துள்ளது என்றார். 

சில பள்ளிகளில் சேர்க்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதால், புதிய வகுப்பறைகள் கட்டப்பட வேண்டும் அல்லது வகுப்பறைகளின் திறனை அதிகரிக்க வேண்டும் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி கார் வெடிப்பு: அமீரைத் தொடர்ந்து 2 வது நபர் கைது!

SIR பணிகளை புறக்கணித்தால் சம்பளம் கிடையாது! | செய்திகள்: சில வரிகளில் | 17.11.25

பயங்கரவாத தாக்குதலுக்கான தண்டனையால் உலகுக்கே செய்தி அனுப்பப்படும்: அமித் ஷா

ஐஆர்பி இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் பங்குகள் 4% உயர்வு!

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் மகன்!

SCROLL FOR NEXT