முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஹரிபோரா பகுதியில் துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 7 ஏப்ரல், 2022 at 11:52 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஹரிபோரா பகுதியில் துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோபியான் மாவட்டத்தில் உள்ள ஹரிபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருவதாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர். 

இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் புதன்கிழமை பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் வெவ்வேறு தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Advertisement

இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், புல்வாமாவில் உள்ள அவந்திபுராவின் பொதுப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.