ஒவ்வொரு ஏழைக்கும் வீடு வழங்க நடவடிக்கை: பிரதமா் மோடி
நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழைக்கும் உறுதியான வீடு வழங்க அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்
நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழைக்கும் உறுதியான வீடு வழங்க அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் மூன்று கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மக்களின் பங்களிப்பால் மட்டுமே இந்த வீடுகளைக் கட்ட முடிந்துள்ளது. அனைத்து வீடுகளும் நவீன வசதிகளைக் கொண்டதாகவும், மகளிருக்கு அதிகாரமளிக்கும் அடையாளமாகவும் திகழ்கின்றன. நாட்டின் ஒவ்வொரு ஏழைக்கும் உறுதியான, வலிமையான வீடு வழங்க அரசு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.