பெங்களூருவில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அந்நகரக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள 7 பள்ளிகளுக்கு இமையில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் தொடர்புடைய பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக அந்நகரக் காவல் கண்காணிப்பாளர் கமல் பண்ட் தெரிவித்துள்ளார்.
மேலும், அப்பள்ளிகளில் இருந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.