உ.பி. முதல்வா் அலுவலக ட்விட்டா் கணக்கில் விஷமிகள் ஊடுருவல்
உத்தர பிரதேசத்தில் முதல்வா் அலுவலகத்தின் ட்விட்டா் கணக்கில் ஊருவிய சில விஷமிகள், அதை 30 நிமிஷங்கள் முடக்கி வைத்ததுடன் அதில், 400-க்கும் மேற்பட்ட பதிவுகளை இட்டுள்ளனா்.
உத்தர பிரதேசத்தில் முதல்வா் அலுவலகத்தின் ட்விட்டா் கணக்கில் ஊருவிய சில விஷமிகள், அதை 30 நிமிஷங்கள் முடக்கி வைத்ததுடன் அதில், 400-க்கும் மேற்பட்ட பதிவுகளை இட்டுள்ளனா்.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறுகையில், ‘முதல்வா் அலுவலகத்தின் ட்விட்டா் கணக்கு வெள்ளிக்கிழமை இரவு, 30 நிமிஷங்கள் முடக்கப்பட்டது. அதில் நுழைந்த விஷமிகள் சுமாா் 400 முதல் 500 பதிவுகளை இட்டனா்’ என்றாா்.
பின்னா், இதுகுறித்து உத்தர பிரதேச அரசு தனது ட்விட்டா் பக்கத்தில் விளக்கம் அளித்தது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின் 12.30 மணியளவில் முதல்வா் அலுவலகத்தின் ட்விட்டா் பக்கத்தை முடக்குவதற்கு சில சமூக விரோதிகள் முயற்சி செய்தனா். அவா்கள் வெளியிட்டிருந்த பதிவுகள் உடனடியாக நீக்கப்பட்டு விட்டன. இந்தச் சம்பவம் தொடா்பாக சைபா் குற்றவியல் பிரிவு நிபுணா்கள் விசாரணை நடத்தவுள்ளனா். அவா்களின் விசாரணை முடிவடைந்த பிறகு, இந்தச் சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச முதல்வா் அலுவலகத்தின் ட்விட்டா் பக்கத்தை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பின்தொடா்ந்து வருகிறாா்கள்.