இந்தியா

ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த ஒருநாள் கரோனா பாதிப்பு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 949 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒருநாள் கரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 949 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒருநாள் கரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 810 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,07,038 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.76 சதவிகிதமாக உள்ளது. 

மேலும் 6 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி 5,21,743 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது 11,191 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.03 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.  

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 186.30 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

கடந்த திங்கள்(861), செவ்வாய்(796) கிழமைகளிலும் ஒருநாள் கரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT