மேற்கு வங்க இடைத்தேர்தல்: திரிணமூல் வெற்றி 
இந்தியா

மேற்கு வங்க இடைத்தேர்தல்: திரிணமூல் வெற்றி

மேற்கு வங்கத்தில் ஆசன்சோல் மக்களவைத் தொகுதி மற்றும் பாலிகஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.

DIN

மேற்கு வங்கத்தில் ஆசன்சோல் மக்களவைத் தொகுதி மற்றும் பாலிகஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள ஆசன்சோல் மக்களவைத் தொகுதி மற்றும் பாலிகஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆசன்சோலில் 64.03 சதவிகித வாக்குகளும், பாலிகஞ்சில் 41.1 சதவிகித வாக்குகளும் பதிவாகின.

இவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்றது. 

பாலிகஞ்ச் தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் பாபுல் சுப்ரியோவும், ஆசன்சோல் தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் சத்ருகன் சின்ஹாவும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆசன்சோல் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்த பாபுல் சுப்ரியோ பதவியை ராஜிநாமா செய்து கட்சியிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். பிறகு, பாலிகஞ்ச் இடைத்தேர்தலில் திரிணமூல் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். காங்கிரஸிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்த நடிகர் சத்ருகன் சின்ஹா அக்கட்சி சார்பில் ஆசன்சோல் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT