யோகி ஆதித்யநாத் 
இந்தியா

அனுமதி பெற்றால் மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முடியும்: யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை, மத வழிபாட்டுத் தலங்களில் அனுமதியுடன் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தலாம், ஆனால் வளாகத்திலிருந்து ஒலி வெளியே வரக்கூடாது.

DIN

லக்னோ: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை, மத வழிபாட்டுத் தலங்களில் அனுமதியுடன் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தலாம், ஆனால் வளாகத்திலிருந்து ஒலி  வெளியே வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார். 

ஒலிபெருக்கிகளுக்கு புதிய அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவருக்கும் அவரவர் வழிபாட்டு முறையைத் தேர்ந்தெடுக்க சுதந்திரம் உள்ளது. ஆனால் அது மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.

மகாராஷ்டிராவின் நாசிக் காவல்துறை, மத வழிபாட்டுத் தலங்களில் அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த தடை விதித்த சில நாட்களுக்குப் பிறகு, உ.பி.  முதல்வரின் அறிக்கை வந்துள்ளது.

ஆசான் வழங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பும் பின்பும், பஜனைகளை இசைப்பதற்கும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த நாசிக் காவல்துறை தடை விதித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு இடங்களும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த மே 3 ஆம் தேதிக்குள் அனுமதி பெற வேண்டும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT