இந்தியா

அனுமதி பெற்றால் மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முடியும்: யோகி ஆதித்யநாத்

DIN

லக்னோ: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை, மத வழிபாட்டுத் தலங்களில் அனுமதியுடன் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தலாம், ஆனால் வளாகத்திலிருந்து ஒலி  வெளியே வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார். 

ஒலிபெருக்கிகளுக்கு புதிய அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவருக்கும் அவரவர் வழிபாட்டு முறையைத் தேர்ந்தெடுக்க சுதந்திரம் உள்ளது. ஆனால் அது மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.

மகாராஷ்டிராவின் நாசிக் காவல்துறை, மத வழிபாட்டுத் தலங்களில் அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த தடை விதித்த சில நாட்களுக்குப் பிறகு, உ.பி.  முதல்வரின் அறிக்கை வந்துள்ளது.

ஆசான் வழங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பும் பின்பும், பஜனைகளை இசைப்பதற்கும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த நாசிக் காவல்துறை தடை விதித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு இடங்களும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த மே 3 ஆம் தேதிக்குள் அனுமதி பெற வேண்டும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT