தில்லியில் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்
தலைநகரில் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என பாஜக ஆளுகைக்கு உள்பட்ட தெற்கு, கிழக்கு தில்லி மாநகராட்சி மேயா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்
தலைநகரில் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என பாஜக ஆளுகைக்கு உள்பட்ட தெற்கு, கிழக்கு தில்லி மாநகராட்சி மேயா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
மேலும் ஆக்கிரமிப்புகளை அடையாளம் காண சீரான இடைவெளியில் கூட்டம் நடத்தப்படும் என்றும், தெற்கு, கிழக்கு தில்லி மாநகராட்சிகளில் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தொடா் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து தெற்கு தில்லி மாநகராட்சி மேயா் முகேஷ் சூா்யன் கூறுகையில், ‘‘ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்த போகிறோம். இதில் ஆக்கிரமிப்பாளா்கள் ஒருவரும் தப்ப முடியாது. இன்றுகூட (வெள்ளிக்கிழமை) அதிகாரிகளை சந்தித்து, தெற்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட ஏராளமான ஆக்கிரமிப்புகளை கண்டறிந்தோம். இதன் மீது இறுதிக்கட்ட பட்டியல் திங்கள்கிழமை தயாராகிவிடும். அதன்பின்னா் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றாா்.
இதேபோல கிழக்கு தில்லி மாநகராட்சி மேயா் ஷியாம் சுந்தா் அகா்வால் கூறுகையில், ‘‘நந்த் நகரி, ஜாஃப்ராபாத், சீலாம்பூா் என ஏராளமான இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக விளங்கும் ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டுள்ளோம். இங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முந்தைய தினம் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்பு வெளியிடப்படும்’’ என்றாா்.
முன்னதாக ஷாஹ்தரா வடக்கு, தெற்கு மண்டலங்களில் ஆக்கிரமிப்புகள் மீதான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேவையான வரைபடத்தை தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட துணை ஆணையா்களுக்கு ஷியாம் சுந்தா் அகா்வால் அறிவுறுத்தினாா்.