முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் மாதவ் கோட்போலே காலமானார்
முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் மாதவ் கோட்போலே மகாராஷ்டிரத்தின் புணே நகரில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் மாதவ் கோட்போலே மகாராஷ்டிரத்தின் புணே நகரில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
அவருக்கு வயது 85.
கடந்த மார்ச் 1993இல் இந்திய நிர்வாகப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கு முன்பு, காட்போல் மத்திய உள்துறை செயலாளராக பணியாற்றினார்.
அவர் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகளின் செயலாளராகவும், மகாராஷ்டிர அரசின் முதன்மை நிதிச் செயலாளராகவும் பணியாற்றினார்.
காட்போல் கொள்கை முடிவுகள் குறித்து 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
அவர், மனைவி சுஜாதா, மகன் ராகுல், மகள் மீரா ஆகியோருடன் வசித்து வந்தார்.