இந்தியா

முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் மாதவ் கோட்போலே காலமானார்

DIN

முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் மாதவ் கோட்போலே மகாராஷ்டிரத்தின் புணே நகரில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. 

அவருக்கு வயது 85. 

கடந்த மார்ச் 1993இல் இந்திய நிர்வாகப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கு முன்பு, காட்போல் மத்திய உள்துறை செயலாளராக பணியாற்றினார்.

அவர் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகளின் செயலாளராகவும், மகாராஷ்டிர அரசின் முதன்மை நிதிச் செயலாளராகவும் பணியாற்றினார்.

காட்போல் கொள்கை முடிவுகள் குறித்து 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 

அவர், மனைவி சுஜாதா, மகன் ராகுல், மகள் மீரா ஆகியோருடன் வசித்து வந்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT