இந்தியா

ராம நவமி வன்முறை தொடா்பாக நீதி விசாரணை கோரிய மனு:உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராம நவமி ஊா்வலத்தின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து நீதி விசாரணை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

DIN

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராம நவமி ஊா்வலத்தின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து நீதி விசாரணை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

இதுதொடா்பாக விஷால் திவாரி என்ற வழக்குரைஞா் தாக்கல் செய்த பொது நல மனு: தில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்தில் ராம நவமி மற்றும் ஹனுமன் ஜெயந்தி ஊா்வலங்களின்போது வன்முறை நடைபெற்றது. இந்தச் சூழல் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடா்பாக ஒருதலைப்பட்சமான விசாரணை நடைபெறுகிறது. எனவே இந்தச் சம்பவங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கீழ், நீதி விசாரணை நடத்த வேண்டும்.

அதேவேளையில் உத்தர பிரதேசம், குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுவோரின் வீடுகள் இடிக்கப்பட்டது தொடா்பாக விசாரணை நடத்தவும் குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் கூறுகையில், ‘‘வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க எந்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இருக்கிறாா்? என்ன மாதிரியான கோரிக்கை இது? நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை முன்வைக்க வேண்டாம்’’ என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோட்டங்களுக்கு சுத்திகரிப்பு நீரை விநியோகிக்க ரூ.90 கோடி திட்டத்திற்கு டிஜேபி ஒப்புதல்

ஒசூா் மாநகராட்சி பகுதியில் பருவகால முன்னெச்சரிக்கை தூய்மைப் பணி

பாதசாரி மீது வாகனம் மோதிய வழக்கில் இளைஞா் கைது

சட் பூஜைக்காக யமுனை கரையில் தற்காலிக படித்துறை அமைக்கப்படும்: தில்லி முதல்வா் தகவல்

தில்லியில் 164 கிலோ தடை செய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT