FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஹிந்தி தேசிய மொழியா? இல்லையா? விவாதத்தில் இவர்களும் களமிறங்கிவிட்டார்கள்

ஹிந்தி தேசிய மொழியா? இல்லையா? என்ற வாதம் நெடுங்காலமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், நடிகர்கள் அஜய் தேவ்கன், கிச்சா சுதீப் இடையேயான விவாதம் நேற்று பேசுபொருளானது.

Updated On : 28 ஏப்ரல் 2022, 4:23 pm IST
ஹிந்தி தேசிய மொழியா? இல்லையா? விவாதத்தில் இவர்களும் களமிறங்கிவிட்டார்கள்
பகிர்:


பெங்களூரு: ஹிந்தி தேசிய மொழியா? இல்லையா? என்ற வாதம் நெடுங்காலமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், நடிகர்கள் அஜய் தேவ்கன், கிச்சா சுதீப் இடையேயான விவாதம் நேற்று பேசுபொருளானது.

அந்த வரிசையில் ஹிந்தி தேசிய மொழியில்லை, இந்தியாவுக்கு என்று தேசிய மொழியில்லை என்ற விவாதத்தில் இன்று கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தராமையாவும் குமாரசாமியும் இணைந்துள்ளனர். 

ஹிந்தி எப்போதும், இனி ஒருபோதும் தேசிய மொழியில்லை. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், பல மொழி பேசும் நாட்டின் பன்முகத்தன்மையை மதிக்க வேண்டியது கட்டாயம்.  ஒவ்வொரு மொழியும், அதற்கென இருக்கும் உயர்ந்த வரலாற்றைக் கொண்டுள்ளன. நான் கன்னட மொழி பேசுபவன் என்ற பெருமை எனக்குண்டு என்று சித்தராமையா தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
 

இதையும் படிக்க.. நீயா பட பாணியில் பழிவாங்கத் துடிக்கும் பாம்பு: 7 முறை கடிபட்டவரின் கதை

அஜய் தேவ்கானை டேக் செய்து சித்தராமையா பேசியிருக்க, மற்றொரு முன்னாள் முதல்வர் குமாரசாமி, நடிகர் சுதீப்புக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கிறார். இவர் சொன்னபடி ஹிந்தி தேசிய மொழியில்லை என்பது சரிதான். இவர் சொன்னதில் எந்த தவறுமே இல்லை. என்னைப் பொறுத்தவரை, ஹிந்தியும் ஒரு மொழி, அவ்வளவுதான், எப்படி கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளமோ அதுபோலத்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments