நரேந்திர மோடி / ராகுல் காந்தி 
இந்தியா

’நரேந்திர மோடியைக் கண்டு பயப்பட மாட்டோம்’: ராகுல் காந்தி

பிரதமர் மோடியைக் கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

DIN

பிரதமர் மோடியைக் கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட்டு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நேற்ற்ய் நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகத்தைப் பூட்டி அமலாக்கத் துறையினர் சீல் வைத்தனர்.

‘வழக்கில் கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றவியல் பிரிவின் கீழ் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது’ என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்திருந்தனா்.

அதனைத் தொடர்ந்து தில்லியில் சோனியா காந்தி வசித்து வரும் 10, ஜான்பத் இல்லத்திற்கு முன் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி ‘நேஷனல் ஹெரால்டு ஒரு மிரட்டல் முயற்சி. கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் எங்களை அமைதிப்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால், நாங்கள் நரேந்திர மோடியை கண்டு பயப்படப்போவதில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT