முகப்பு
இந்தியா

ஆகஸ்ட் 7ல் வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு!

வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 5 ஆகஸ்ட், 2022 at 9:39 AM
கோப்புப்படம்
பகிர்:

வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

குறைந்த  காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக பருவ மழை மேலும் தீவிரமடைய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

குறிப்பாக ஒடிசாவின் சில பகுதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்யும் என்றும் ஆகஸ்ட் 6 முதல் 10 வரை ஒடிசாவில் பரவலாக மழை இருக்கும் என்றும் 

Advertisement

வங்கக் கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றின் தீவிரம் 45 - 55 கிமீ வேகத்தில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இது புயலாக மாறுமா என்பது பின்னரே தெரிய வரும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.