இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரம்

DIN

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடைசி வாரத்தை எட்டியுள்ள நிலையில் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஜூலை 18ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத்தொடரில், பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவைகளின் அலுவல்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூட்டத்தொடர் கடைசி வாரத்தை எட்டியுள்ள நிலையில், நிலுவையில் உள்ள மின்சார சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்வதில் மத்திய அரசு கவனம் செலுத்த வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, வேலையின்மை, நேஷனல் ஹெரால்டு வழக்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

முன்னதாக, அமளியில் ஈடுபட்ட காரணத்திற்காக இரு அவைகளிலும் 27 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT