முகப்பு
இந்தியா

கோவா: அரசு நடத்தும் தொடக்கப் பள்ளிகளைத் தத்தெடுத்த ஆம் ஆத்மி தொண்டர்கள்

கோவாவில் அரசு நடத்தும் தொடக்கப் பள்ளிகளைத் தத்தெடுக்க முன்வந்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. 

Updated On : 9 ஆகஸ்ட், 2022 at 3:05 PM
பகிர்:

கோவாவில் அரசு நடத்தும் தொடக்கப் பள்ளிகளைத் தத்தெடுக்க முன்வந்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் கோவா பிரிவு தலைவர் அமித் பலேகர், 

ஒரு ஆசிரியர் அல்லது குறைவான மாணவர்களுடன் இயங்கும் தொடக்கப் பள்ளிகளை இணைக்கவோ அல்ல மூடவோ மாநில அரசு விரும்புவதாகக் கூறினார். 

Advertisement

கல்வி இயக்குநரான ஷைலேஷ் ஜிங்காடேவை சந்தித்த பாலேகர்,  இதுபோன்ற பள்ளிகளைக் கட்சி தத்தெடுத்து தில்லி பள்ளிகளில் அரசு செய்த விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார். 

எங்களை அரசியல் கட்சியாகப் பார்க்க வேண்டாம். 

மாநில அரசின் இந்த முடிவால் எந்த ஒரு மாணவரும் பள்ளியை விட்டு வெளியேறாமல் இருக்க நாங்கள் முன்வந்து உதவத் தயாராக இருக்கிறோம் என்று ஆம் ஆத்மி தலைவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.