இந்தியா

மகாராஷ்டிரம்: கனமழைக்கு இதுவரை 120 பேர் பலி

DIN

மகாராஷ்டிரத்தில் கடந்த 2 மாதங்களாக பெய்து வரும் கனமழையால் இதுவரை 120 பேர் பலியானதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் இன்று வரை பெய்து வரும் கனமழையால் கட்சிரோலி, புணே, சதாரா, சோலாப்பூர், நாசிக், ஜல்கான், அகமதுநகர் மற்றும் கோந்தியா போன்ற 28 மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளன.

குறிப்பாக, கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள சிரோஞ்சா நகரில் வெள்ளப்பெருக்கு நிலவி வருவதால், ஏராளமான நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கனமழை மற்றும்  வெள்ளம் தொடர்பான பல்வேறு சம்பவங்களில்  ஜூன் 1 முதல் இதுவரை 120 பேர் பலியானதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும், 240 விலங்குகள் உயிரிழந்ததுடன் 370 கிராமங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT