இந்தியா

பிகாரில் போலி மதுபானம் குடித்து 4 பேர் பலி

DIN

பிகாரில் போலி மதுபானம் குடித்த 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து மதுரா காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், 

இந்த சம்பவம் சரண் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு நடந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இறந்தவர்கள் காமேஷ்வர், மஹ்தோ, ரோஹித் சிங், ராஜேந்திர ராம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், அனைவரும் புவல்பூர் கிராமத்தில் வசிப்பவர்கள், அல்லாவுதீன் கான் என்பவர் பக்கத்து கர்கா ஓதா கிராமத்தைச் சேர்ந்தவர்.

மேலும் சிலர் உடல்நிலை சரியில்லாமல் சாப்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 4 ஆம் தேதி, பெல்டி மற்றும் மேக்கர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட கிராமங்களில் போலி மதுபானம் அருந்திய 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 15 க்கும் மேற்பட்டோர் பார்வை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT