முகப்பு
இந்தியா

ராஜஸ்தான்: சுதந்திர தின விழாவில் நன்னடத்தைக்காக 51 கைதிகள் விடுவிப்பு

ராஜஸ்தானில் சுதந்திர தின விழாவையொட்டி எஸ்எம்எஸ் அரங்கத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Updated On : 13 ஆகஸ்ட், 2022 at 11:58 AM
பாகிஸ்தான் சிறைகளில் 680 இந்தியர்கள்: சிறைக்கைதிகளின் பட்டியல் பரிமாற்றம்
பகிர்:

ராஜஸ்தானில் சுதந்திர தின விழாவையொட்டி எஸ்எம்எஸ் அரங்கத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 51 கைதிகள் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுவிக்கப் படுகிறார்கள். மேலும் 21 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு சிறந்த சேவைக்காக விருது வழங்கப்படுகிறது. 

மாநில அளவிலான விழா ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் அரங்கத்தில் இன்று முழு நாள் ஒத்திகை நடைபெறவுள்ளதாக பொது நிர்வாகத் துறை செயலாளர் ஜிதேந்திர குமார் உபாத்யாயா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  அபய் குமார் அரங்கிற்கு வருகை தந்து இன்று ஆய்வு நடத்தவுள்ளார். 

Advertisement

இந்த நிகழ்வின் போது, ​​முதல்வர் அசோக் கெலாட், இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் காவல்துறை பதக்கத்தை வழங்குகிறார். மேலும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளான தினேஷ் எம்என் மற்றும் ஜோஸ் மோகன் உள்பட 17 அதிகாரிகளுக்கு காவல்துறை பதக்கங்களை வழங்க உள்ளது. 

விடுதலை செய்யப்பட உள்ள 51 கைதிகளில் 36 பேர் மொத்த சிறைத்தண்டனையின் மூன்றில் இரண்டு பங்கையும், பாதி சிறைவாசத்தை முடித்த 60 வயதுக்கு மேற்பட்ட ஐந்து ஆண் கைதிகளும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த 10 கைதிகளும் சிறைவாசத்தை முடித்துள்ளனர். 

அபராதத் தொகை கட்ட முடியாமல் நலிவடைந்த கைதிகள் தண்டனைக் காலம் முடிந்த பிறகும் அவர்களை விடுவிக்க முடியவில்லை என அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.