இந்தியா

ஆறு மாதத்தில் இல்லாத வகையில் தில்லியில் கரோனா பலி அதிகரிப்பு

PTI

புது தில்லி: கடந்த 6 மாதத்தில் இல்லாத வகையில் கடந்த வாரத்தில் மட்டும் தில்லியில் 51 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

தில்லியில் கடந்த 6 மாதங்களில் இல்லாத வகையில் தற்போது கரோனா பலி அதிகரித்துள்ளது. ஒரு பக்கம் நாட்டில் கரோனா பாதிப்பு மூன்றாவது வாரமாகக் குறைந்து வரும் நிலையில் தில்லியில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாட்டில் ஆகஸ்ட் 8 - 14ஆம் தேதி வரையிலான வாரத்தில் 307 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். ஞாயிறன்று சில மாநிலங்களில் பலி எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. அதனோடு சேர்த்தால் மொத்த பலி எண்ணிக்கை 310 ஐ எட்டும். அவ்வாறு இருந்தால் மார்ச் மாதம் முதல் வாரத்துக்குப் பிறகு பதிவாகும் அதிக உயர்பலியாகும்.

மார்ச் முதல் வாரத்தில் 626 பேர் பலியாகினர். கடந்த வாரம் கரோனாவுக்கு 295 பேர் பலியாகினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செலவுத் தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனம் புகாா்தாரருக்கு ரூ. 1.61 லட்சம் வழங்க உத்தரவு

வெப்ப அலை: வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புப் பணி போலீஸாருக்கு பழச்சாறு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் இன்று குருபெயா்ச்சி விழா

கா்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

SCROLL FOR NEXT