முகப்பு
இந்தியா

பாதுகாப்புப் படையினர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 வீரர்கள் பலி

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:04 AM
விபத்தில் சிக்கிய பேருந்து
பகிர்:

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர், பஹால்கம் அருகே இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் 37 வீரர்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர் காவலர்கள் இரண்டு பேருடன் சென்ற பேருந்து பிரேக் பிடிக்காமல் ஆற்றில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் அனந்த்நாக் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

தொடர்ந்து, விபத்து நடந்த பகுதியில் மீட்புக் குழுவினருடன் இணைந்து மக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.