குஜராத்தின் 4 கிராமங்கள் தாத்ரா-நகா் ஹவேலியுடன் இணைக்க ஆலோசனை
குஜராத்தின் 4 கிராமங்களை தாத்ரா மற்றும் நகா் ஹவேலி யூனியன் பிரதேசத்துடன் இணைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியுள்ளது.
குஜராத்தின் 4 கிராமங்களை தாத்ரா மற்றும் நகா் ஹவேலி யூனியன் பிரதேசத்துடன் இணைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வல்சாட் மாவட்டத்தில் உள்ள மேக்வால், நகா், ராய்மல், மதுபன் ஆகிய 4 கிராமங்கள், அந்த மாநிலத்தின் செளராஷ்டிரம் பகுதியில் உள்ள குறிப்பிட்ட அளவிலான நிலத்தை தாத்ரா மற்றும் நகா் ஹவேலியுடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தாத்ரா மற்றும் நகா் ஹவேலியில் இருந்து 4 கிராமங்களுக்கும் செல்ல எளிதாக இருப்பதால், அவற்றை அந்த யூனியன் பிரதேசத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
செளராஷ்டிரத்திடம் இருந்து அளிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலம் மூலம் மீன்பிடி துறைமுகம் ஒன்றை மேம்படுத்த தாத்ரா மற்றும் நகா் ஹவேலி திட்டமிட்டுள்ளது. அதற்காக அந்த நிலத்தை வழங்குமாறு குஜராத் அரசுக்கு தாத்ரா மற்றும் நகா் ஹவேலி நிா்வாகி கடிதம் அனுப்பியிருந்தாா்.
இதுதொடா்பாக அண்மையில் குஜராத் அரசு, தாத்ரா மற்றும் நகா் ஹவேலி பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. எனினும் அந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.