இந்தியா

தொழிலதிபா் கெளதம் அதானிக்கு‘இசட் பிரிவு’ பாதுகாப்பு

தொழிலதிபா் கெளதம் அதானிக்கு மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படையின் (சிஆா்பிஎஃப்) ‘இசட் பிரிவு’ பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

DIN

தொழிலதிபா் கெளதம் அதானிக்கு மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படையின் (சிஆா்பிஎஃப்) ‘இசட் பிரிவு’ பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இந்தப் பாதுகாப்பு ஊதியத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதாகவும், இதற்கான செலவு மாதத்திற்கு ரூ. 15 முதல் 20 லட்சம் வரையிலும் இருக்கும் என அவா்கள் தெரிவித்தனா்.

அதானியின் உயிருக்கு அச்சுறுத்தல் வாய்ப்பு உள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைப்புகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானிக்கு பாதுகாப்பு வழங்குமாறு சிஆா்பிஎஃப்-இன் முக்கிய பிரமுகா்களுக்கான பாதுகாப்பு பிரிவை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதாக அதிகாரிகள் கூறினா்.

கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து ரிலையன்ஸ் நிறுவன தொழிலதிபா் முகேஷ் அம்பானிக்கு சிஆா்பிஎஃப்-இன் கமாண்டோ பிரிவினரால் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து அவரது மனைவிக்கும் பாதுகாப்பும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் அமித் ஷாவைச் சந்தித்தேன்: செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

26 ஆண்டுகளுக்குப் பின் வைரல்! யார் இந்த பாடகர் சத்யன்?

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 24 மாவட்டங்களில் மழை!

போலி தத்தெடுப்பு ஆவணங்களைப் பயன்படுத்தி குழந்தைகள் விற்பனை மருத்துவா் உள்பட 10 போ் கைது

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி ராஜிநாமா!

SCROLL FOR NEXT