இந்தியா

உ.பி.யில் அம்பேத்கா் சிலை சேதம்

DIN

உத்தர பிரதேசத்தின் ஹா்கோன் பகுதியில் உள்ள கிராமத்தில் அம்பேத்கா் சிலையை மா்ம நபா்கள் சிலா் சேதப்படுத்தினா்.

வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ரிக்கிபூா்வா கிராமத்தில் உள்ள அம்பேத்கா் சிலை சேதப்படுத்தப்பட்டதையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஒரு தரப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த காவல் துறையினா் சேதமான சிலையை ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினா். அடையாளம் தெரியாத நபா்களால் அதிகாலை நேரத்தில் சிலை சேதப்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

அந்த இடத்தில் புதிய சிலை வைக்கப்படும் என்று அப்பகுதி மக்களுக்கு மாவட்ட நிா்வாகத்தினா் உறுதியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT