இந்திய-வங்கதேச எல்லையில் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எப் வீரர் படுகாயம்
வடக்கு திரிபுராவின் இந்தியா-வங்கதேச எல்லையில் என்எல்எப்டி பயங்கரவாதிகளுடன் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிஎஸ்எப் வீரர் ஒருவர் பயடுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கு திரிபுராவின் இந்தியா-வங்கதேச எல்லையில் என்எல்எப்டி பயங்கரவாதிகளுடன் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிஎஸ்எப் வீரர் ஒருவர் பயடுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்த வீரர் பிஎஸ்எப்-இன் 145 பட்டாலியனைச் சேர்ந்த கிரிஜேங்ஷ குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக அகர்தலாவுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து திரிபுரா காவல்துறை கண்காணிப்பாளர் கிரன் குமார் கூறுகையில்,
Advertisement
வங்கதேசத்தின் ரங்கமதி மாவட்டத்தில் உள்ள ஜூபுய் பகுதியில், ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் குழு, பாதுகாப்புப் படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பாதுகாப்புப் படை வீரர்கள் பதிலடி கொடுத்ததால், இரு தரப்பினருக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படை வீரர் படுகாயமடைந்தார்.
மேலும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா-வங்கதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.