ஜம்முவில் வைஷ்ணவி தேவி கோயிலில் மீண்டும் பக்தர்கள் அனுமதி 
இந்தியா

ஜம்முவில் வைஷ்ணவி தேவி கோயிலில் மீண்டும் பக்தர்கள் அனுமதி

ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

ANI


ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மழை நின்று, வெள்ளம் குறைந்த நிலையில், சனிக்கிழமை, வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஜம்முவில் இருந்து 50 கிலோமீட்டா் தொலைவில் உள்ள திரிகுடா மலையின் உச்சியில் அமைந்துள்ளது வைஷ்ணவி தேவி கோயில். நேற்று இப்பகுதியில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டதால் பக்தர்களின் பாதுகாப்புக்காக கத்ரா பகுதியிலிருந்து செல்லும் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சிஆர்பிஎஃப் வீரல்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இன்று காலை மழை குறைந்ததையடுத்து, மீண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT