இந்தியா

ஜம்மு-காஷ்மீர் பேருந்து விபத்து: மேலும் ஒரு வீரர் பலி

DIN

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒரு வீரர் பலியானார். 

கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே 2 காவலர்களுடன் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் 37 பேர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்ற வீரர்கள் படுகாயமுற்ற நிலையில் ஸ்கிம்ஸ்(SKIMS) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு வீரர் இன்று உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

அமர்நாத் யாத்திரை பணிகளை முடித்து திரும்பும்போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. மேலும் பிரேக் பிடிக்காத காரணத்தால் விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT