இந்தியா

உ.பி: மொராதாபாத்தில் திருமண மண்டபத்தில் தீ: 5 பேர் பலி, 7 பேர் காயம்

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள மூன்று மாடிகள் கொண்ட திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் இறந்தனர். 

DIN


உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள மூன்று மாடிகள் கொண்ட திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் இறந்தனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் நகரின் மையத்தில் உள்ள மூன்று மாடிக் கட்டட  திருமண மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பற்றியதும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மண்டபத்திலிருந்து வெளியேறியுள்ளனர். மேலும், தி விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர். 

திருமண மண்டபத்தில் ஏற்பட தீ விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்பட 5 பேர் இறந்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 5 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தீயில் சிக்கிய 7 பேரை மீட்டனர். 

தீ விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

30 ஆண்டு கோரிக்கை! கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் திறப்பு!

கூஃபிஜென்னை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த்..! 1 கோடி பார்வைகளைக் கடந்த நடன விடியோ!

பிப். 15-ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

இதுபோன்ற விடியோக்களை வெளியிடுவது முதல்முறை! கிரண் ரிஜிஜு ராஜிநாமா செய்ய வேண்டும்!

ஓடிடியில் வெளியானது தலைவர் தம்பி தலைமையில்!

SCROLL FOR NEXT