கோப்புப் படம் 
இந்தியா

ஈத்கா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடத் தடை

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகேவுள்ள சாம்ராஜ்பேட்டை ஈத்கா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதியில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகேவுள்ள சாம்ராஜ்பேட்டை ஈத்கா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதியில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈத்கா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளித்த கர்நாடக அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

சாம்ராஜ்பேட்டை ஈத்கா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட கர்நாடக அரசு கடந்த 26ஆம் தேதி அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து வக்ஃபு வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.எம்.சுந்தரேஷ், ஏ.எஸ்.ஓகா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈத்கா மைதானத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு சதுர்த்தி கொண்டாட அனுமதியில்லை என அறிவித்தது. 

இந்த மைதானத்தை இஸ்லாமியர்களின் பண்டிகைகளை கொண்டாடவும், மற்ற நேரங்களில் விளையாட்டுத் திடலாகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி இடைக்கால உத்தரவில் தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

இருப்பினும், மாநில அரசு சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பின்னர், இரண்டு ஏக்கர் நிலத்தில் மத மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT